சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்களை தங்க வைத்து சிகிச்சை வழங்க உத்தேசம் !



நூருல் ஹுதா உமர்-
பிராந்திய மக்களின் நலன்கருதி , ஆதார வைத்தியசாலைகளில் கட்டில்கள் இல்லாமல் அவஸ்தைப்படும்‌ கொரோனா நோயாளர்களில் ஒரு பிரதேச வைத்தியசாலையில் வைத்து சிகிச்சை வழங்கக்கூடிய அளவு நோயாளர்களை இங்கு தங்கவைத்து சிகிச்சை வழங்கி அவர்களை பாரிய உபாதைகளுக்கு உள்ளாகாமல் பாதுகாக்கும் நோக்கில் முன்னாயத்தம் உத்தேசிக்கப்பட்டுள்ளது என சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை பதில் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் சனுஸ் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

மேலும் சாதாரண வெளிநோயாளர் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, கிளினிக் மற்றும் விடுதிகளில் அனுமதி என்பன வழமை போன்று ஒரு புறமாக நடைபெற, கொரோனா நோயாளர்களுக்கு அவர்களுக்குரிய கட்டுப்பாடுகளுடன் வேறு பக்கமாகவும் சிகிச்சை வழங்கக்கூடிய வசதிகள் சாய்ந்தமருது வைத்தியசாலையில் இருப்பதும் விஜயம் செய்த சுகாதாரத்துறையினரால் அவதானிக்கப்பட்டது.

இதற்குரிய முன்னெடுப்புகள் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் அவர்களின் தலைமையில் திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் .எம்.சி.எம்.மாஹீர் மற்றும் தொற்று நோய்த்தடுப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர். ரமேஷ் அவர்களின் கண்கானிப்பில் ஏற்பாடாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :