முடக்கத்தில் நடுத்தரம் (கவிதை)




முடக்கத்தில் நடுத்தரம்
+++++++
Mohamed Nizous


முடக்கம் வந்தால்
கிடைக்கும் உதவியில்
எடுக்கும் கூட்டம்
ஏதோ வாழும்


செல்வக் கூட்டமும்
சிரமங்கள் இன்றி
உள்ளிருந்து கொள்ளும்
உள்ளதால் வாழும்


எனினும் அவதியில்
இடைத்தரம் மாட்டும்
தானாய்ப் போராடும்
தன் கஷ்டம் மறைக்கும்


நடுத்தர வர்க்கம்
நலிந்து போனாலும்
நடுத்தெரு வராது
அடுத்தவர் அறியார்


பொல்லாத கெளரவம்
பொல்லோடு நிற்க
சொல்லாது மறைப்பார்
சோறுமில்லா நிலையை


பார்ப்பவர் நினைப்பார்
பக்கா வாழ்வென
யார்க்கும் இவர் நிலை
இலகுவில் புரியாது


அன்றாடம் உழைத்து
அதில் வரும் லாபத்தில்
நன்றாக வாழ்ந்தவர்
நாதியின்றி நிற்பார்


ஆறேழு நாட்கள்
அப்படி இப்படி
போராடி சமாளிப்பார்
ஊரார் அறியார்


ஆனால் தொடர்ந்து
அதே நிலை இருந்தால்
தான் பசி இருப்பார்
தன் பிள்ளை வயிறார


இவர்களை அறிந்து
இரகசியமாய் உதவல்
சுவர்க்கத்தை தரும்
கவனத்தில் கொள்வோம்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :