இத் திட்டம் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் கடற்கரை சிறுவர் பூங்கா அமைந்துள்ள பகுதிக்கு முன்னால் இருந்து முதற் கட்டமாக ஆரம்பமாகியுள்ளது.
இதற்கென 12 மில்லியன் ரூபா செலவிடப்பட உள்ளதுடன் இது மீன்பிடி நடவடிக்கைகள் நடைபெறாத பகுதிகளில் தற்போது நடைமுறைப்படுத்தபட்டு வருகின்றன.
மீன்பிடி நடவடிக்கைக்காக பயன்படுத்தப்படுகின்ற பகுதிகளில் கற்களை பயன்படுத்தி தடுப்பு சுவர் அமைப்பது அவர்களின் நாளாந்த தொழிலுக்கு தடையாக அமையும் என்பதனால் கரையோரம் பேணல் திணைக்களத்தினால் இப்பகுதியில் ( Geo bag ) மண் மூடைகள் இடுவதற்காக திட்டமிடப்பட்டுள்ளன.
ஜியோ பேக் ( GeoBag ) பைகளில் மண் இட்டு நிரப்பி கடல் அரிப்பை தடுக்கும் முறைகள் எதிர்வரும் ஜனவரி மாதத்திலிருந்து கரையோரம் திணைக்களத்தினால் 25 மில்லியன் ரூபா செலவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment