வட மத்திய மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு விண்ணப்பிக்கும் காலஎல்லை நீடிப்பு



ட மத்திய மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா தாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் வட மத்திய மாகாண அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் அண்மையில் கோரப்பட்டிருந்தது. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி திகதியாக ஆகஸ்ட் 31 அறிவிக்கப்பட்டிருந்தது.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் முடக்க நிலை காரணமாக அநேகமான பட்டதாரிகளுக்கு குறித்த விண்ணப்பங்களை இறுதி திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்விடயம் குறித்து வட மத்திய மாகாண பட்டதாரிகள் சிலர் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்கள் பொதுஜன பெரமுனவின் அனுராதபுர மாவட்ட தலைவரும், காணி அமைச்சருமான எஸ்.எம்.சந்திரசேன, வட மத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் மற்றும் வட மத்திய மாகாண அரசாங்க சேவை ஆணைக்குழுவின் செயலாளர் தேஜானி திலகரத்ன அவர்களுடனும், குறித்த ஆசிரியர் சேவைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு தொடர்பில் இன்று 30 தொலைபேசி ஊடாக கலந்துரையாடினார்.

அதனடிப்படையில் வட மத்திய மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா தாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. புதிய விண்ணப்ப முடிவுத்திகதி வட மத்திய மாகாண அரசாங்க சேவை ஆணைக்குழுவின் செயலாளர் அவர்களினால் இன்னும் சில தினங்களில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.

ஐ.எம்.மிதுன் கான்
ஊடக செயலாளர்.
ஊடகப்பிரிவு.
இஷாக் ரஹுமான் பா.உ.
அனுராதபுரம்.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :