நாட்டில் ஏற்பட்டிருக்கும் முடக்க நிலை காரணமாக அநேகமான பட்டதாரிகளுக்கு குறித்த விண்ணப்பங்களை இறுதி திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்விடயம் குறித்து வட மத்திய மாகாண பட்டதாரிகள் சிலர் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்கள் பொதுஜன பெரமுனவின் அனுராதபுர மாவட்ட தலைவரும், காணி அமைச்சருமான எஸ்.எம்.சந்திரசேன, வட மத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் மற்றும் வட மத்திய மாகாண அரசாங்க சேவை ஆணைக்குழுவின் செயலாளர் தேஜானி திலகரத்ன அவர்களுடனும், குறித்த ஆசிரியர் சேவைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு தொடர்பில் இன்று 30 தொலைபேசி ஊடாக கலந்துரையாடினார்.
அதனடிப்படையில் வட மத்திய மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா தாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. புதிய விண்ணப்ப முடிவுத்திகதி வட மத்திய மாகாண அரசாங்க சேவை ஆணைக்குழுவின் செயலாளர் அவர்களினால் இன்னும் சில தினங்களில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.
ஐ.எம்.மிதுன் கான்
ஊடக செயலாளர்.
ஊடகப்பிரிவு.
இஷாக் ரஹுமான் பா.உ.
அனுராதபுரம்.
இஷாக் ரஹுமான் பா.உ.
அனுராதபுரம்.
0 comments :
Post a Comment