திருகோணமலை மாவட்டத்தில் நெல் களஞ்சியசாலைகள் சுற்றி வளைப்பு



எம்.ஏ.முகமட்-
திருகோணமலை மாவட்ட நெல் மொத்த வியாபாரிகள், அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் அரசாங்க அதிபர் தலைமையிலான அதிகாரிகளுக்குமிடையிலான கலந்துரையாடல் (8) மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தலைமையில் நடைபெற்றது.

கடந்த சில தினங்களாக மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் நெல்லை அளவுக்கதிகமாக களஞ்சிசாலைகளில் களஞ்சியப்படுத்தி வைத்திருந்த 16 களஞ்சியசாலைகள் பரீசிலிக்கப்பட்டதுடன் அங்கிருந்த 2250 மெட்ரிக் டொன் அரிசி பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையால் இனங்காணப்பட்டுள்ளதுடன் அக்களஞ்சியசாலைகளுக்கு முத்திரையும் பதிக்கப்பட்டதாக இதன்போது அரசாங்க அதிபர்

மேலும் இந்நடவடிக்கையின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் 380 மெட்ரிக் டொன் நெல் நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு உரியவர்களால் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இன்னும் ஆறு வர்த்தகர்கள் 293 மெட்ரிக் டொன் நெல்லை நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்குவதற்கு தங்களுடைய விருப்பத்தை ஏற்கனவே தெரிவித்துள்ளனர். மேலும் முத்திரையிடப்பட்ட 2250 மெட்ரிக் டொன் நெல்லினுள் 1800 மெட்ரிக் டொன் அளவான நெல்லை அவர்கள் அரசாங்க நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்குவதற்கு தங்களுடைய விருப்பத்தை இதன்போது பூரணமாக தெரிவித்தனர்.

மேலும் தங்களது விதைநெல் அதைப்போன்று உணவுக்கு அவசியமான நெல் சாதாரணமான முறையில் அவர்களுக்கு கிடைக்கப் பெறுவதை உறுதி செய்து கொண்டு மேலதிகமாக இருந்த நெல்லை இவ்வாறு நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்க தயார் என இதன்போது கலந்து கொண்ட நெல் மொத்த வியாபாரிகள் அரசாங்க அதிபரிடம் தெரிவித்தனர்.

அதற்கிணங்க அவர்களது நியாயமான கோரிக்கை மீது கவனம் செலுத்திய அரசாங்க அதிபர் அதற்கேற்றாற்போல் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

இன்று மாலை முதல் குறித்த களஞ்சிய சாலைகளில் இருக்கக்கூடிய நெல் அரச நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாகத் இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

அதேபோன்று இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட சீனி மொத்த வியாபாரி ஒருவர் தம்மிடம் இருக்கக்கூடிய சீனி இருப்புத் தொகையை நியாயமான முறையில் அனைத்து வியாபாரிகளுக்கும் அதேபோன்று சில்லரை வியாபாரிகளுக்கும் விநியோகிக்க உள்ளதாகவும் அச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ்,மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பி.ஆர்.ஜயரத்ன ,பிரதேச செயலாளர்கள் நெல் மொத்த வியாபாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :