கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார பணியாளர்கள் பல அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வைத்தியசாலைமுன்றலில் கவனயீர்ப்பு போராட்டத்தை இன்று (27)முன்னெடுத்தனர்.
ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கத்தின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்ற குறித்த எதிர்ப்பு நடவடிக்கையில் சுகாதார பணியாளர்கள் பாதைகளை எந்தியவாறு அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடளாவிய ரீதியில் சுகாதார பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு வரும்
நிலையில், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
0 comments :
Post a Comment