கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பொதுமக்கள் சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர்



பைஷல் இஸ்மாயில் -
நாட்டில் தற்போது அதிகமாக ஏற்பட்டுவரும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பொதுமக்கள் மிக அவதானமாக செயற்பட வேண்டும் என்றும் அதற்காக, கொவிட் 19 தொற்றாளர்களும், அதிக அறிகுறிகள் இல்லாதவர்களும் தங்களின் தனிமைப்படுத்தும் காலங்களை ஆயுர்வேத வைத்திய சிகிச்சைகளுடன், பாரம்பரிய உணவு முறைகளை பெற்றுக்கொண்டு பூரண சுகத்தை பெற்றுக்கொள்வதற்கான சகல வசதிகளையும் முற்றிலும் இலவசமாக திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலுள்ள தள ஆயுர்வேத வைத்தியசாலைகளில் வழங்கப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி இ.ஸ்ரீதர் தெரிவித்தார்.

கொவிட் 19 தொற்றாளர்களும், அதிக அறிகுறிகள் இல்லாதவர்களும் தங்களின் தனிமைப்படுத்தும் காலங்களை மிக அவதானமாக கடைப்பிடிப்பதன் மூலம் இந்தத் தொற்றிலிருந்து எமது குடும்ப அங்கத்தவர்களையும், ஏனையவர்களையும் பாதுகாத்துக் கொள்ள முடியும். எனவே, இம் மாவட்டத்திலுள்ளவர்கள் தங்களின் தனிமைப்படுத்தும் காலங்களை பாரம்பரிய உணவு முறைகள் அடங்கிய வைத்திய ஆலோசனைகள் அடங்கிய சிகிச்சைகளை முற்றிலும் இலவசமாக திருகோணமலை கப்பல்துறை தள ஆயுர்வேத வைத்தியசாலை, மட்டக்களப்பு தள ஆயுர்வேத வைத்தியசாலை, அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலை, கிண்ணியா நடுத்தீவு மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை போன்ற வைத்தியசாலைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

அங்கு சீனிப் பரிசோதனை, குருதி அமுக்க பரிசோதனை, சுவாசப் பரிசோதனை உள்ளிட்ட பல வைத்திய பரிசோதனைகளுடன் சிகிச்சைகளும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய பாரம்பரிய உணவு வகைகளையும் நாளாந்தம் இலவசமாக வழங்கி வருவதாகவும் மேலும், திருகோணமலை மாவட்டத்திலுள்ளவர்கள் தங்களின் தனிமைப்படுத்தும் காலங்களை கப்பல்துறை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 தொற்று தற்போது வேகமாக பரவி வருவதனால் பொதுமக்கள் தங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். எனவே, திருகோணமலை மாவட்டத்திலுள்ளவர்கள் தங்களினதும், தங்கள் குடும்பத்திலுள்ளவர்களின் உடல் ஆரோக்கியத்தை பேணிப் பாதுகாக்க திருகோணமலை மாவட்டங்களிலுள்ள பிரதேசங்களில் இருக்கின்ற ஆயுர்வேத வைத்திய பொறுப்பதிகாரி மற்றும் சமூக நல வைத்தியர்களை தொடர்பு கொண்டு கொவிட் 19 தொடர்பான வைத்திய ஆலோசனைகளுடன் அதற்கான சிகிச்சை முறைகளை முற்றிலும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

திருகோணமலை மாவட்ட பிரதேசங்களிலுள்ள வைத்திய பொறுப்பதிகாரிகள் மற்றும் சமூக நல வைத்தியர்களின் தொலைபேசி இலக்கங்கள்,

திருகோணமலை பட்டணமும், சூழலும் பிரதேச செயலாளர் பிரிவு Dr.K.Niruba - 0740037294, Dr. N.Subashini - 0779749780, Dr. A.Ilankumaran -0740037282

குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவு – Dr. S.R.P.Rajeev - 0740037290, Dr. S.Sathees - 0740037251, Dr. R.Vaikalai - 0774605627

கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவு – Dr. Prasadika Wijeyasekara - 0717787101, Dr.Chamal Wijayasooriya - 0714410301

மோறவேவா பிரதேச செயலாளர் பிரிவு – Dr. Kasundweera - 0713406651

பதவிய ஸ்ரீபுர பிரதேச செயலாளர் பிரிவு – Dr. Jeyamal Indika Kumara -0710373003

கோமரங்கடவல பிரதேச செயலாளர் பிரிவு – Dr. Jeyamal Indika Kumara -0710373003

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவு – Dr. H.M.Haris - 0772254232

தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவு – Dr. M.N.P.Mohanachandran - 0752785468, Dr. J.Arunpalan - 0752340800

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவு – Dr. I.S.M.Riswan - 0754381712, Dr.Mrs.M.F.Fahmitha - 0778470575

சேருவில பிரதேச செயலாளர் பிரிவு – Dr. Erandi Jeyasinghe - 0783521989

வெருகல் பிரதேச செயலாளர் பிரிவு – Dr. Y.M.Rishad - 07197033878
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :