வாழ்வாதாரம் முடக்கப்பட்ட குடும்பங்களுக்கான கல்முனையன்ஸ் போரத்தின் நான்காம் கட்ட நிவாரண நிதி விநியோகம்.



நூருள் ஹுதா உமர்-
கொவிட் தீவிர பரவல் காரணமாக அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டிருக்கும் நாட்டின் முடக்க நிலை காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து கல்முனையன்ஸ் போரம் உதவிக்கரம் நீட்டி வருகிறது.

அந்த வரிசையில் தற்பொழுது நாட்டில் அமுலிலிருக்கும் லொக்டவுண் காரணமாக வாழ்வாதாரம் முடக்கப்பட்ட ஒரு தொகுதி குடும்பங்களுக்கான நான்காம் கட்டமாக நிவாரண விநியோகம் நிதியாக பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது.

கல்முனை, இஸ்லாமபாத் ஆகிய பிரதேசங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 225 பயனாளிக்குடும்பங்களுக்கு தலா ரூபா 2,000/= படி நிவாரண நிதி கடந்த இரு நாட்களில் (06,07) வழங்கிவைக்கப்பட்டிருக்கிறது.
கொவிட் பெருந்தொற்று காலத்தில் கல்முனையன்ஸ் போரமானது இதுவரையிலும் நான்கு கட்டங்களில் சுமார் 2.25 மில்லியன் ரூபா பெறுமதியான நிவாரண விநியோகத்தினை மேற்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :