கொரோனா தணிய விளக்கேற்றல் பிரார்த்தனை!



வி.ரி.சகாதேவராஜா-
நாட்டில் ஓரளவு தணிந்துவரும் கொரோனாத் தொற்று நாட்டைவிட்டு முற்றாக நீங்கவேண்டும் எனக்கோரி திருவிளக்கேற்றல் பிரார்த்தனை நடாத்தப்பட்டது.
காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ஆகியோரின் ஏற்பாட்டில் மாத்தளைமாநகரில் இருவேறு ஆலயங்களில் இப்பிரார்த்தனை நடாத்தப்பட்டது.

மாத்தளை நகரிலுள்ள வரலாற்றுப்பிரசித்திபெற்ற மாத்தளை முத்துமாரியம்மன் ஆலயத்திலும் மாத்தளை புறநகர்ப்பகுதியிலுள்ள ரத்தோட்ட எல்க்கடுவ நாகத்தம்பாள் ஆலயத்திலும் இவ்விசேட விளக்கேற்றல் பிரார்த்தனையும் விசேடபூஜையும் நடாத்தப்பட்டன.

மாத்தளை மாநகர மேயர் சந்தனம் பிரகாஷ் மற்றும் உறுப்பினர் த.மோகனும் இதில் கலந்துகொண்டனர். விசேட பொங்கலும் இடம்பெற்றது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :