கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் மின் துண்டிப்பு!



பாறுக் க்ஷிஹான்-
ம்பாறை மாவட்டம் கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில், அவசர திருத்த வேலை காரணமாக காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரை எதிர்வரும் 09ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை மின் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார்.
இதற்கமைய நாளை (09) நிந்தவூர் மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட ஒலுவில் பிரதேசத்தில் மின் தடைப்படும்.

அத்துடன் எதிர் வரும் வெள்ளிக்கிழமை (10), சம்மாந்துறை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட மல்கம்பிட்டி வீதி, புளக் கிழக்கு மலையடிக் கிராமம், கல்லரிச்சல் ஆகிய பகுதிகளில் மின் தடைப்படும்.

எதிர் வரும் திங்கட்கிழமை (13), கல்முனை, நிந்தவூர், சாய்ந்தமருது ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட அம்மன் கோவில், உடையார் வீதி, வி.வி வீதி, இஸ்லாமாவாத் வீட்டுத் திட்டம், பாலமுனை, சின்னப்பாலமுனை, அட்டாளைச்சேனை, தரவைக் கோவில், கடற்கரைப்பள்ளி வீதி ஆகிய பகுதிகளில் மின் தடைப்படும்.

செவ்வாய்க்கிழமை (14), நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட சின்னப்பாலமுனை மற்றும் கோணாவத்தை, உடங்கா, அம்பாறை வீதி, ஹிலால் புரம் ஆகிய பகுதிகளில் மின் தடைப்படும்.

புதன்கிழமை (15), சம்மாந்துறை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட மாவடிப்பள்ளி, வைத்தியசாலை ஆகிய பகுதிகளில் மின் தடைப்படும்.

வெள்ளிக்கிழமை (17), கல்முனை மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட மணல்சேனை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் மின் தடைப்படும்.

சனிக்கிழமை (18), நிந்தவூர், சம்மாந்துறை ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட ஒலுவில் கிராமம், அல் அர்சாத் பாடசாலை பகுதி, மாவடிக் கிராமம் ஆகிய பகுதிகளில் மின் தடை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :