சீனித் தட்டுப்பாட்டுக்கு தீர்வு வழங்கும் நோக்கில், கிலோ 122 ரூபாவுக்கு வழங்குவதாக சதொச அறிவிப்பு



மினுவாங்கொடை நிருபர்-
துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 80 கொள்கலன் சீனி விடுவிக்கப்பட்டதன் காரணமாக, எதிர்வரும் நாட்களில் ஒரு கிலோ சீனியை 122 ரூபாவுக்கு பொதுமக்களுக்கு வழங்க முடியுமென, லங்கா சதொச தலைவர் ரியல் அத்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது ஒரு கிலோ சீனி 145 ரூபா தொடக்கம் 160 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ள அவர், விரைவில் சதொச ஊடாக பொதுமக்கள் தட்டுப்பாடின்றி சீனியைப் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :