கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் அவர்களின் நேரடி கண்காணிப்பில் 18 தொடக்கம் 19 வயதானவர்களுக்கு முதலாம் கட்ட பைசர் (Pfizer) தடுப்பூசி வழங்கும்நிகழ்வு சாய்நதமருது சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் நேற்று (21) முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது மேற்குறித்த வயதினர் தடுப்பூசி செலுத்த ஆர்வத்துடன் வருகை தந்து தடுப்பூசியை பெற்றுக் கொண்டனர்.
இதன் போது பாடசாலை அதிபர் எம். ஐ . ஜாபிர் மற்றும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பணியாளர்கள் ஆகியோர் இணைந்து குறித்ததடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
0 comments :
Post a Comment