2 1/2 இலட்சம் ரூபா பெறுமதியான நூல்களை, அல் - அமான் நூலகத்திற்கு அன்பளிப்புச் செய்த கலாபூஷணம் நிலாம்



மினுவாங்கொடை நிருபர்-
வ்வாண்டுக்கான வாசிப்பு மாதத்தை முன்னிட்டு, நேற்று  (25) மினுவாங்கொடை, கல்லொழுவை, அல் - அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் சிறப்பு நிகழ்வு ஒன்று, அதிபர் எம்.ரீ.எம். ஆஸிம் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, இக்கிராமத்தைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளரும், நாடறிந்த எழுத்தாளருமான கலாபூஷணம் எம்.ஏ.எம். நிலாம் ( கவிஞர் - ஈழத்து நூன் ) சுமார் 2 1/2 இலட்சம் ரூபா பெறுமதியான பெருந்தொகையான நூல்களை, அல் - அமான் வித்தியாலய நூலகத்திற்கு அன்பளிப்புச் செய்தார்.
நூலின் ஒரு தொகுதியை, கலாபூஷணம் நிலாம் தனது பேரன் முஹம்மது ஸமான் மூலம் அதிபரிடம் கையளித்தார். மாணவர்களின் வாசிப்புத் திறனை, மேலும் ஊக்குவிக்கும் நோக்கிலேயே இந்நூல்கள் அன்பளிப்புச் செய்யப்படுவதாக, கலாபூஷணம் நிலாம் இதன்போது குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :