இவ்வாண்டுக்கான வாசிப்பு மாதத்தை முன்னிட்டு, நேற்று (25) மினுவாங்கொடை, கல்லொழுவை, அல் - அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் சிறப்பு நிகழ்வு ஒன்று, அதிபர் எம்.ரீ.எம். ஆஸிம் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, இக்கிராமத்தைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளரும், நாடறிந்த எழுத்தாளருமான கலாபூஷணம் எம்.ஏ.எம். நிலாம் ( கவிஞர் - ஈழத்து நூன் ) சுமார் 2 1/2 இலட்சம் ரூபா பெறுமதியான பெருந்தொகையான நூல்களை, அல் - அமான் வித்தியாலய நூலகத்திற்கு அன்பளிப்புச் செய்தார்.
நூலின் ஒரு தொகுதியை, கலாபூஷணம் நிலாம் தனது பேரன் முஹம்மது ஸமான் மூலம் அதிபரிடம் கையளித்தார். மாணவர்களின் வாசிப்புத் திறனை, மேலும் ஊக்குவிக்கும் நோக்கிலேயே இந்நூல்கள் அன்பளிப்புச் செய்யப்படுவதாக, கலாபூஷணம் நிலாம் இதன்போது குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment