வாழும்போதே வாழ்த்துவோம்-2021



காத்தான்குடி அறிவிப்பாளர் போரத்தின் செயற்திட்டங்களில் ஒன்றான "வாழும் போதே வாழ்த்துவோம்" செயற்திட்டத்தின் கீழ் சிறு வயதிலேயே அறிவிப்பு, நிகழ்ச்சி நெறிப்படுத்தல் போன்ற துறைகளில் ஆர்வத்துடன் திறமையை வெளிக்காட்டி வருவதுடன் "வெள்ளி வெளிச்சம்" எனும் முகநூல் பக்கத்தில் தனக்கென நேயர்களை உருவாக்கி சாதனை புரிந்து வரும் முஹம்மட் றியாஸ் பாத்திமா றிஸ்லா அவர்களை வாழ்த்தும் நிகழ்வு 08.10.2021 வெள்ளிக்கிழமை அவரது இல்லத்தில் இடம்பெற்றது.

காத்தான்குடி அறிவிப்பாளர் போரத்தின் தலைவர் அறிவிப்பாளர் எம்.பஹ்த் ஜுனைட் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அதிதிகளாக காத்தான்குடி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.ஜவாஹிர் (பலாஹி) , கலாபூஷணம் காத்தான்குடி பெளஸ் மெளலவி ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன் போரத்தின் உப தலைவர்
எம்.ஐ.அப்துல் நசார்,செயலாளர் ஏ.ஆர்.எம்.அஸ்ஹர்,பொருளாளர் ஏ.ரீ.எம்.றியாஸ், நிர்வாக சபை உறுப்பினர் பி.எம்.பயாஸ் ஆகியோருடன் ஊடகவியலாளர்,அறிவிப்பாளர் எம்.எஸ்.எம்.சஜி மற்றும் குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டு சிறுமியை வாழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

இவ் வாழ்த்து நிகழ்வில் விஷேடமாக கலைச்சுடர் ஏ.எம்.அப்துல் ரவூப் அவர்களின் பாடல்களும் இடம்பெற்றிருந்தமை சிறப்பம்சமாகும்..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :