நாட்டிலுள்ள ஆரம்பப் பிரிவுப் பாடசாலைகள், நேற்று (25) ஆரம்பிக்கப்பட்டபோது, மினுவாங்கொடை கல்வி வலயத்திலுள்ள கல்லொழுவை, அல் - அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஆரம்பப் பிரிவில் கல்வி கற்கும் மொத்தம் 300 மாணவர்களில் 225 மாணவர்கள் வருகை தந்தனர். ஆரம்பப் பிரிவு மொத்த ஆசிரியர்கள் 19 பேரில் 18 பேர் வருகை தந்ததாக, அதிபர் எம்.ரீ.எம். ஆஸிம் தெரிவித்தார்.
நேற்று (25) காலை 7 மணி முதல் மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தந்தனர். பொலிஸாரின் பாதுகாப்புக்கு மத்தியில் சுகாதார விதிமுறைகளைப் பேணி மாணவர்கள் பாடசாலைக்கு அனுமதிக்கப்பட்டனர். பிரதி அதிபர் எம்.எம்.எம். றிம்ஸான் மற்றும் உதவி அதிபர் எம். றிழான் ஆகியோரினால் மாணவர்கள் வரவேற்கப்பட்டனர்.
0 comments :
Post a Comment