நாளை (23) சனிக்கிழமை, பாடசாலைக் கல்வியிலிருந்து இடை விலகிய மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி



மினுவாங்கொடை நிருபர்-
மினுவாங்கொடை சுகாதார சேவைப் பிரிவில், 2001.10.15 - 2003.10.15 ஆகிய வருடங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பிறந்து, பாடசாலைக் கல்வியில் இருந்து இடை விலகிய மாணவர்களுக்கான பைசர் தடுப்பூசி, நாளை 23 ஆம் திகதி (சனிக்கிழமை) மற்றும் எதிர்வரும் 30 ஆம் திகதி (சனிக்கிழமை) காலை 08.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மினுவாங்கொடை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் (M.O.H. Office) பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.
இதேவேளை, மினுவாங்கொடை பிரதேசத்தில் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு 2020 ஆம் ஆண்டு தோற்றிய மற்றும் 2021 இல் தோற்றவுள்ள மாணவர்களுக்கான பைசர் (Pfizer) தடுப்பூசி, நாளை (23) சனிக்கிழமை காலை 08.30 மணி முதல்12.30 மணி வரை செலுத்தப்படவுள்ளதாகவும்,
இத்தடுப்பூசி, மினுவாங்கொடை செனரத் பரணவித்தான மகா வித்தியாலயத்தில் குறித்த பாடசாலை மாணவர்களுக்கும், மினுவாங்கொடை தம்மிட்ட மகா வித்தியாலய மாணவர்களுக்கும் அத்துடன், உடுகம்பொள சென் பீட்டர்ஸ் கல்லூரியில் குறித்த கல்லூரி மாணவர்களுக்கும் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாகவும், மினுவாங்கொடை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :