சம்மாந்துறை வலயத்தில் 39பாடசாலைகள் 21இல் திறக்கப்படும்.



காலை 9.30மணிக்கு முன் ஆசிரியர் மாணவர் வரவுஅறிக்கை அனுப்படல்வேண்டும்!
சம்மாந்துறை கல்விஅதிகாரிகளுக்கு பிரதிக்கல்விப்பணிப்பாளர் மஜீட் அறிவுறுத்து!
வி.ரி.சகாதேவராஜா-

ம்மாந்துறை வலயத்தில் 39பாடசாலைகள் எதிர்வரும் 21ஆம் திகதிதிறக்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. அதிபர்களுக்கு 'சூம்' தொழினுட்பமூலம் சகலஅறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.கல்வி அதிகாரிகளாகிய உங்களுக்கு முக்கிய கடமை இருக்கிறது. அன்று காலை 9.30 மணிக்கு முன் பாடசாலைக்கு வருகைதந்த அதிபர் ஆசிரியர் கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவரது வரவுஅறிக்கை அனுப்பப்படல் வேண்டும்.

இவ்வாறு சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனையின் பிரதிகக்ல்விப்பணிப்பாளர் எ.எல்.அப்துல் மஜீட் நேற்று (18) திங்கட்கிழமை பணிமனையில் நடைபெற்ற கல்விசார் உத்தியோகத்தர் கூட்டத்தில் அறிவுறுத்தினார்.

குறித்த கூட்டம் நேற்று (18) வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீமின் வழிகாட்டலில், பிரதிவலயக்கல்விப்பணிப்பாளரான எஸ்.எம்.எம்.அமீர் தலைமையில் நடைபெற்றது. பிரதிக்கல்விப்பணிப்பாளர்களான எ.நசீர் ,யு.எல்.றியாழ் ஆகியோரும் மேலதிக அறிவுறுத்தல்களை வழங்கினர்.

கொவிட் தடுப்பு தொடர்பாக தயாரிக்கப்பட்ட பதாதைகள் துண்டுப்பிரசுரங்கள் செய்திக்குறிப்புகள் அனைத்தும் வழங்கப்படவுள்ளது.
எதிர்வரும் 20 ஆம் 28 ஆம் திகதிகளில் பாடசாலைச்சூழலில் பாடசாலை திறப்பது தொடர்பாக ஒலி பெருக்கிமூலம் பொது அறிவிப்பு செய்யவேண்டும். இதனை கோட்டக்கல்விப்பணிப்பாளர்கள் பொறுப்பேற்கவேண்டும்.
முதலிருவாரங்களில் மாணவர்களுக்கு கற்பித்தலில் அழுத்தம் பிரயோகிக்கப்படக்கூடாது. மாறாக அவர்கள் சுயாதீனமாக சுதந்திரமாக இயல்புநிலைக்கு திரும்புவதற்கேற்றவிதமாக கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் இலகுபடுத்தப்பட்டுள்ளன.கற்பித்தல் என்று பெரிதாக எதுவும் இடம்பெறாதவகையில் ஏனைய புறக்கிருத்தியசெயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு மாணவர் அனுமதிக்கப்படுவர்.
.
தடுப்பூசி போடாத எந்தஆசிரியரும் வகுப்பறைக்குள் நுழையமுடியாது. அதைவிட தடுப்பூசி போடப்படாத பெற்றோர் கல்விசாரா ஊழியர்கள் யாரும் பாடசாலைக்குள் நுழைய அனுமதிக்கப்படக்கூடாது.

ஆசிரியர்கள் தொழிற்சங்கப்போராட்டம் என்று ஏதாவது சமுகமளிப்பின்மை இடம்பெற்றால் அதனை எதிர்கொள்ளுமுகமாக பிரதேசசெயலகங்களிலுள்ள அபிவிருத்திஉத்தியோகத்தர்களின் சேவையை பெறுவது தொடர்பாகவும் ஆளுநர் மட்டத்தில் கலந்துரையாடப்பட்டிருக்கிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :