கல்முனையில்செளபாக்கிய தேசிய வாரத்தின் இறுதி நாள் நிகழ்வுகள்



எம். என். எம். அப்ராஸ்-
முர்த்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில், செளபாக்கிய தேசிய வாரத்தை முன்னிட்டு கல்முனை பிரதேச சமுர்த்தி குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் இறுதி நாள் வேலைத்திட்ட நிகழ்வுகள் கல்முனை சமுர்த்தி வங்கி, வலயப் பிரிவில் (30) நேற்று இடம்பெற்றது.

இதன் போது பயன்தரும் மரக்கன்றுகள் நடல், வீடமைப்பு வேலைத்திட்டம்களை ஆரம்பத்தில், சுகாதார மேன்பாட்டு வேலைத்திட்டத்திற்கான காசோலை வழங்கி வைத்தல் என்பன இடம்பெற்றது.

கல்முனைகுடி சமுர்த்தி வங்கி, வலய முகாமையாளர் மோசஸ் புவிராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமை பீட சிரேஷ்ட முகாமையாளர் எ. ஆர். எம். சாலிஹ், சமுர்த்தி வலய உதவி முகாமையாளர் எஸ். எல். அஸீஸ், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம்.நௌசாத், சமுர்த்தி வங்கி உதவி முகாமையாளர் எம்.எம். முஜீப் உட்பட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் பலரும் கலந்து கொண்டனர்.

செளபாக்கிய தேசிய வாரம் கடந்த மாதம் 23 ம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை வரஅனுஷ்டிக்கப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :