ஆரம்ப பிரிவுப் பாடசாலைகள் இன்று ஆரம்பம்



எம்.ஏ.முகமட்-
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகள் (தரம் 1 முதல் 5 வரை) இன்று (25) திங்கட்கிழமை
திறக்கப் படும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்தார்.
சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் அந்த தரங்களில் வகுப்புகளை ஆரம்பிக்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனுமதி வழங்கியிருந்தார்.

முதற்கட்டமாக, 200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகள் ஒக்டோபர் 21-ம் திகதி ஆரம்பமானது.

அதன்படி, இரண்டாம் கட்டத்தின் கீழ், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகள் (தரம் 1 முதல் 5 வரை) இவ்வாறு ஆரம்பிக்கப்படவுள்ளன.
அதேபோல், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் மற்றும் கத்தோலிக்க பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளிலும் கல்வி நடவடிக்கைகளைத் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 40 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ள வகுப்புகளை நடாத்தும் போது, ​​மாணவர்களை பகுதி பகுதியாக அழைத்து கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கல்விச் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

இதற்காக அதிபர்களுக்கு முழுமையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
விரைவில் ஏனைய தரங்களில் வகுப்புகளையும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :