அம்பாறை மாவட்ட மீனவர்களுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு



எம்.என்.எம். அப்ராஸ் ,நூருல் ஹுதா உமர்-
ம்பாறை மாவட்டத்தில் மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் மற்றும் மீனவர்களின் தேவைகள், தொடர்பில்கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் அம்பாறை மாவட்ட மீனவர்களுடனான சந்திப்பு கல்முனைமீன்பிடித் திணைக்கள மாவட்ட காரியாலயத்தில் மாவட்ட உதவிப்பணிப்பாளர் நடராஜா ஸ்ரீரஞ்சன்தலைமையில் இன்று (27) காலை நடைபெற்றது.

இதன் போது இங்கு கலந்து கொண்ட மீன்பிடி அமைப்புக்கள், மீன்பிடி சம்மேளனம், மீன்பிடி சங்கங்களின்சமாசம் ஆகியவற்றின் தலைவர்கள், முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள் எனப்பலரும் தமது பிரச்சினைகளைதீர்க்க கோரி அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்தனர்
குறிப்பாக ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தின் நிலை தொடர்பில் மீனவ சங்க பிரதிநதிகள் அமைச்சரின்கவனத்திற்குக்கு எடுத்துரைத்தனர் அத்துடன் மீனவர்கள் படும் கஷ்டங்கள், சட்டவிரோத மீன்பிடிபோன்றவற்றிலிருந்து தமக்கு உரிய தீர்வினை பெற்றுத்தருமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

மீனவர்களின் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிந் து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாஇதற்கான உரிய தீர்வினை பெற்று தருவதாக மீனவ பிரதிநிதிகளிடம் தெரிவித்தார் .

மீனவர்களுக்கும் அமைச்சருக்கிடையிலான இச் சந்திப்பில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், திணைக்கள அதிகாரிகள், கல்முனை பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ்பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த, கரையோரம் பேனல் திணைக்கள அதிகாரிகள், இலங்கை கடற்படைகல்முனை நிலைய பொறுப்பதிகாரி அசம்போட்கே இரங்க உட்பட திணைக்கள உயரதிகாரிகள், அமைச்சின்அதிகாரிகள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், மீனவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது மீனவ பிரதிநிதிகள் மீன்பிடி அமைச்சரிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரைகையளித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :