நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, திவுலப்பிட்டிய பிரதேசத்திலும் டெங்கு நோய் பரவும் ஆபத்து காணப்படுவதாக, திவுலப்பிட்டிய பொது சுகாதாரப் பரிசோதகர் அருண ரந்தெனிய தெரிவித்தார்.
திவுலப்பிட்டிய சுகாதார சேவைப் பிரிவில் தற்போது டெங்கு நுளம்பு பரவுவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், இவ்வாறு கவனயீனமாக இருப்பவர்களுக்கு சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இப்பிரதேசத்திலுள்ள வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றிலேயே டெங்கு நுளம்புகள் உருவாகுவதற்கான டெங்குக் குடம்பிகள் இருக்கின்றனவா? என்பன தொடர்பில், நாள்தோறும் சுகாதார அதிகாரிகளினால் பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
0 comments :
Post a Comment