கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் சேவையை பாராட்டி நிந்தவூரில் கௌரவிப்பு !



நூருல் ஹுதா உமர்-
கொவிட் 19 கொரோணா தொற்று பரவல் நிலைமையை கட்டுப்படுத்தும் பொருட்டு அர்ப்பணிப்புடன் செயலாற்றிய கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ ஆர் எம் தௌபீக் அவர்களின் சேவையை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நிந்தவூரில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பினால் நடாத்தப்பட்ட இந்த நிகழ்வு நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் போது கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ ஆர் எம் தௌபீக் அவர்களின் மகத்தான சேவையை மதித்து பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் ஐ எம் நிஸ்மி, செயலாளர் ஏ புஹாது ஆகியோர்களினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

இந்த நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எஸ் புவனேந்திரன், நிந்தவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம் சரிப்தீன், முன்னாள் நிந்தவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் கலாபூஷணம் எஸ் அஹமது உட்பட பலரும் கலந்து கொண்டனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :