பசிப்பிணி போக்கும் செயற்றிட்டத்தின்கீழ் பொத்துவிலில் உலருணவுநிவாரணம்.



வி.ரி.சகாதேவராஜா-
கொரோனாத்தொற்று காணரமாக பாதிக்கப்பட்ட பொத்துவில் பிரதேசத்தில் ஒருதொகுதி மக்களுக்கு நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அம்பாறை மாவட்டத்தின் பிரபல சமுகசெயற்பாட்டாளரும், காரைதீவு பிரதேசசபைத்தவிசளாருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலின் ஏற்பாட்டில் இவ் உலருணவு நிவாரணம் பொத்துவில் பிரதேசத்திலுள்ள வட்டிவெளி குண்டுமடு ஆகிய கிராமங்களின் தெரிவுசெய்யப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.

பசிப்பிணி போக்கும் செயற்றிட்டத்தின் ஓரங்கமாக இந்நிவாரணப்பொதி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
கனடிய தமிழ் விளையாட்டுத்துறையின் கரப்பந்தாட்ட அணிகள் இவ்வுலருணவு நிவாரணங்களுக்கான அனுசரணை வழங்கியிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :