நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு, சமய நிகழ்வுகளை நடாத்துவதற்கு சுகாதார அமைச்சினால் அனுமதி



ஐ. ஏ. காதிர் கான் -
பிகள் நாயகத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் 19 ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை), இஸ்லாமிய மத அனுஷ்டானங்கள் மற்றும் சமய நிகழ்வுகளை நடாத்துவதற்கு சுகாதார அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிரதமரும் புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவின் முஸ்லிம் சமய மற்றும் கலாசார விவகாரங்களுக்குப் பொறுப்பான இணைப்பாளர் அஸ் - ஸெய்யித், கலாநிதி ஹஸன் மெளலானா (அல் - காதிரி) வினால் விடுக்கப்பட்ட விசேட வேண்டுகோளையடுத்தே, இவ் அனுமதி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்ட கடிதமொன்றை, கடந்த 15 ஆம் திகதி சுகாதார அமைச்சுக்கு நேரடியாகச் சென்று ஹஸன் மெளலானா கையளித்தார்.
இதனைக் கவனத்தில் கொண்டே, நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தன்று, நாடளாவிய ரீதியில் உள்ள சகல பள்ளிவாசல்களிலும் சமய நிகழ்வுகளை நடாத்துவதற்கு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தனவினால் 15 ஆம் திகதி இடப்பட்ட கடிதத்தில் அனுமதி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
கொவிட் சுகாதார வழி காட்டல்களைப் பின்பற்றி, 50 நபர்களுக்கு மேற்படாமல், குறித்த சமய நிகழ்வுகளை முன்னெடுக்குமாறும், அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இது தொடர்பிலான மேலதிக வழி காட்டல்களை, இலங்கை வக்ஃப் சபை வெகு விரைவில் அறிவிக்கும் என்றும், இத்தினத்தன்று வக்ஃப் சபையின் வழி காட்டல்களை முற்று முழுதாகப் பின்பற்றி நடந்து கொள்ளுமாறும், அஸ் - ஸெய்யித் ஹஸன் மெளலானா இலங்கை வாழ் முஸ்லிம்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :