மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனை காண ஆவலுடன் அணிதிரண்ட வவுனியா மக்கள்...!



ஊடகப்பிரிவு-
றுமாத சிறைவாழ்க்கை ஏற்படுத்திய இடைவெளி, ஆதரவாளர்களின் தொடர்புகளை நீட்டியிருந்தாலும் அன்பின் கனதியை குறைக்கவில்லை. சிறை மீண்ட செம்மலாக, இன்று (29) தனது சொந்த தேர்தல் மாவட்டத்துக்குச் சென்றுள்ள, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீனை அங்குள்ள மக்கள் ஆரத்தழுவி, ஆனந்தத்தை வெளிப்படுத்தினர்.

நேற்று மாலை (29) வவுனியா, சாளம்பைக்குளம் பகுதிக்கு விஜயம் செய்த தலைவர் ரிஷாட், மக்களுடன் அளவளாவினார்.

கட்சித் தொண்டர்கள் ஆதரவாளர்கள், தாய்மார்கள், சிறுவர்கள், சமூகநல விரும்பிகள், சமூகப்பற்றாளர்கள் என பல்வேறு மட்டத்தினரும், தங்களது தலைமையைக் காண அங்கு ஆவலுடன் குழுமியிருந்தனர்.
அங்கு வருகை தந்திருந்தவர்கள், தலைவரின் சுகநலன்களை விசாரித்ததுடன், அவரை ஆரத்தழுவி முஸாபஹா செய்தனர். அங்கு வந்திருந்த தாய்மார்கள் கூட, தமது தலைமை மீதான பற்றை கண்ணீர் மல்க வெளிப்படுத்தியிருந்தனர்.
அந்தச் சந்தர்ப்பத்தில், மக்களுடன் அளவளாவிய தலைவர் ரிஷாட் பதியுதீன், தனக்காகப் பிரார்த்தித்த அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :