காரைதீவு தவிசாளரினால் கொரோனா தொற்று தொடர்பில் விளிப்பூட்டும் பதாதைகள் திறந்து வைப்பு !



நூருல் ஹுதா உமர்-
நாட்டில் வேகமாக பரவிவரும் கொரோனா தொற்று தொடர்பில் மக்களுக்கு விளிப்பூட்டும் பதாதைகள் திறந்து வைக்கும் நிகழ்வு மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் அமைப்பின் தலைவர் எம்.எம். இம்தியாஸின் தலைமையில் மாளிகைக்காடு பிரதேசத்தில் இன்று இடம்பெற்றது.

மாளிகைக்காடு மாளிகா மீன் மொத்த வியாபார மற்றும் நலன்புரி சங்கத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிறில், காரைதீவு பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் பரிசோதகர் கே.கே. அமரானந்த, மாளிகைக்காடு கிழக்கு மற்றும் மேற்கு கிராம நிலதாரிகள், மாளிகைக்காடு, மாளிகா மீன் மொத்த வியாபார மற்றும் நலன்புரி சங்க முக்கியஸ்தர்கள், மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டு பதாதைகளை திறந்து வைத்தனர்.

மாளிகைக்காடு அந்நூர் ஜும்மாப்பள்ளிவாசல் பேஸ் இமாம் மௌலவி இஹ்ஸான் (ஸஃதி) துஆ பிரார்த்தனையை தொடர்ந்து அந்நூர் ஜும்மாப்பள்ளிவாசல் முன்றல், மாளிகைக்காடு மீன் பொதுச்சந்தை, மாளிகைக்காடு பிரதான வீதி ஆகிய இடங்களில் கொரோனா தொற்று தொடர்பில் மக்களுக்கு விளிப்பூட்டும் பதாதைகள் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :