பாடசாலை போக்குவரத்துச் சேவைகளுக்கான கட்டணங்களை அதிகரிக்கத் தீர்மானம்



மினுவாங்கொடை நிருபர்-
வாகன உதிரிப்பாகங்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளமை காரணமாக, பாடசாலை போக்குவரத்துக் கட்டணங்களை அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்துச் சேவைகளை முன்னெடுக்கும் சங்கத்தின் தலைவர் எல். மல்ஸ்ரீ டி. சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் நாட்களில் பாடசாலைகள் மீளத் திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்களின் போக்குவரத்துச் சேவைகளுக்கான கட்டணங்களை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்காலத்தில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டால், பஸ் கட்டணங்களிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :