வாகன உதிரிப்பாகங்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளமை காரணமாக, பாடசாலை போக்குவரத்துக் கட்டணங்களை அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்துச் சேவைகளை முன்னெடுக்கும் சங்கத்தின் தலைவர் எல். மல்ஸ்ரீ டி. சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, எதிர்வரும் நாட்களில் பாடசாலைகள் மீளத் திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்களின் போக்குவரத்துச் சேவைகளுக்கான கட்டணங்களை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்காலத்தில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டால், பஸ் கட்டணங்களிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments :
Post a Comment