பூண்டுலோயாவில் லொறி விபத்து - ஒருவர் காயம்



க.கிஷாந்தன்-
பூண்டுலோயா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கிச் சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

பூண்டுலோயா - தலவாக்கலை பிரதான வீதியில் பேர்லண்ஸ் பகுதியில் குறித்த லொறி வீதியை விட்டு விலகி வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

06.10.2021 அன்று காலை இவ் விபத்து நேர்ந்துள்ளதாக பூண்டுலோயா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
பூண்டுலோயா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்ற லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. எதிரே வந்த வாகனத்திற்கு இடமளிக்கும் போது, வீதி வழுக்கல் தன்மையுடன் காணப்பட்டதனால் மேற்படி லொறி வழுக்கி சென்று விபத்துக்குள்ளாகியதாக லொறியின் சாரதி குறிப்பிட்டுள்ளார்.

லொறியில் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும், அவர் பலத்த காயங்களுக்குள்ளாகி கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :