நேற்று கிழக்கில் உயர்தர மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்கும்பணி ஆரம்பம்



வி.ரி.சகாதேவராஜா-
காரைதீவு பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலை உயர்தர மாணவர்களுக்கான பைசர் ரக தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் நேற்று(21) கிழக்கு மாகாணத்தில் ஆரம்பமானது.
காரைதீவுப்பிரதேசத்தில் பிரதேச சுகாதாரவைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷீர் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இன்றும் (22) பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது.

18-19வயதுக்குட்பட்ட உயர்தர மாணவர்களுக்கான இத்தடுப்பூசிகள் காரைதீவு விபுலாநந்த தேசிய கல்லூரி காரைதீவு சண்முகா மகாவித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளிலும் காலை 8மணிமுதல் மாலை 4மணி வரை ஏற்றப்பட்டுவருகிறது.

நேற்று வியாழக்கிழமை முதற்தடவையாக க.பொ.த.உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றவிருக்கின்ற மாணவர்களுக்கு ஏற்றப்பட்டன. இன்று (22)வெள்ளிக்கிழமை இரண்டாம் தடவையாக தோற்றவிருக்கும் மாணவர்களுக்கும் தடுப்பூசிகள் ஏற்றப்படவிருக்கின்றன.

இந்த இருதினங்களிலும் ஏற்றத் தவறிய மாணவர்களுக்கு நாளை சனிக்கிழமை (23) காரைதீவு சுகாதாரவைத்தியஅதிகாரி பணிமனையில் ஏற்றப்படவிருக்கிறது.
எனவே குறித்த வயதுக்குட்பட்ட சகல மாணவர்களும் இந்த பைசர் ரக தடுப்பூசியைப் குறித்ததினங்களில் பெற்றுக்கொள்ளுமாறு காரைதீவு பிரதேச சுகாதாரவைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷீர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :