போர்க்காலத்தை விட அதிகமானோர் இன்று நாட்டிலிருந்து வெளியேறி வருவதாக அறிவிப்பு



மினுவாங்கொடை நிருபர்-
ட்ட விரோதமான முறையில் படகுகள் மூலம் நாட்டை விட்டு வெளிநாட்டிற்குச் செல்லும் முயற்சிகள், அண்மைய நாட்களாக அதிகரித்து வருவதாகத் தெரியவருகிறது.
இதற்கு முன்னர் இதுபோன்ற நிலைமை, போர்க் காலத்தில் மாத்திரமே இருந்ததாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம், அதிகளவிலான இளைஞர்கள் கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருப்பதாக, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், நீண்ட வரிசையில் ஒரு நாள் சேவையில் விரைவாக கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள தினமும் 1,000 பேர் வரை வருகை தருவதாகவும், திணைக்கள அதிகாரிகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :