இன்று முதல் புதிய சுகாதார வழிகாட்டல்கள் அமுல்



நாட்டில் வழமையான செயற்பாடுகளை படிப்படியாக முன்னெடுப்பதற்காக இன்று முதல் எதிர்வரும் 31ம் திகதி வரையில் நடைமுறைப்படுத்தப்படும் புதிய சுகாதார வழிகாட்டல்கள் ,சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன.

இதேவேளை ஒக்டோபர் முதலாம் திகதி வெளியிடப்பட்ட சுகாதார விதிமுறைகளும் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அமைச்சு அறிவித்துள்ளது.

மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 21ம் திகதி வரை அமுலாகிறது.நாளாந்தம் இரவு 11 மணி முதல் அதிகாலை 04 மணி வரை விதிக்கப்பட்டுள்ள அத்தியாவசியமற்ற பயணங்களுக்கான தடையும் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

பொது மக்கள் ஒன்றுகூடுவது ,வைபவங்கள் மறு அறிவித்தல்வரை அனுமதி இல்லை.

தொழில், சுகாதார தேவைகள் மற்றும் பொருட்கொள்வனவிற்காக வீட்டில் இருந்து ஒருவர் மாத்திரமே வெளியேற முடியும்.

பல்பொருள் அங்காடிகள், சுப்பர் மார்க்கெட்கள், மருந்தகங்களில் 20 வீதமானவர்கள் மாத்திரமே குறிப்பிட்ட நேரத்திற்குள் கொள்வனவில் ஈடுபட முடியும்.

பயிற்சி பட்டறைகள், மாநாடுகள் மற்றும் கூட்டங்கள் இணையத்தளத்தினூடாக மாத்திரமே இடம்பெற வேண்டும் நேரடியாக இடம்பெறுமாயின் 25 வீதமானவர்கள் மாத்திரமே பங்கேற்க முடியும். ஒரு தடவையில் 50 பேர் மாத்திரமே ஒன்றுகூட முடியும்.
திருமணங்களில் அதிகபட்சம் 50 பேர் மாத்திரமே பங்கேற்க முடியும்

பண்டிகைகள், களியாட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல்களை நடத்த முடியாது. வீடுகளுக்குள் இடம்பெறக்கூடிய நிகழ்வுகளுக்கும் இது பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருளாதார மத்திய நிலையங்களில் மொத்த விற்பனை மாத்திரமே இடம்பெற முடியும்

உணவு விடுதிகளில் 30 வீதமானவர்கள் மாத்திரமே உள்வாங்கப்பட முடியும். வெளியரங்க இருக்கை வசதி வரவேற்கப்படுகின்றது.
உணவு விடுதிகளுக்குள் மது அருந்துவதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து வாகனங்களில் ஆசனங்களுக்கு ஏற்ப மாத்திரமே பயணிகள் பயணிக்க முடியும்.

சிகையலங்கார நிலையங்கள், அழகு நிலையங்களுக்கு முன்னறிவித்தலின் பின்னரே வாடிக்கையாளர்கள் செல்ல முடியும்.

ஆரம்ப பாடசாலைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்ட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் 50 வீதமான மாணவர்களுடனேயே இயங்க முடியும்.

எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் திரையரங்குகளில் ஒரு காட்சிக்காக 25 வீதமான பார்வையாளர்களை உள்வாங்க முடியும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :