முதியோர்களை வீடு தேடிச் சென்று கெளரவிக்கும் நிகழ்வு



பைஷல் இஸ்மாயில் -
ர்வதேச முதியோர் தினத்தினையொட்டி அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் வசிக்கும் 100 வயதினைக் கடந்த சிரேஷ்ட பிரஜைகள் பலர் கெளரவிக்கப்பட்டனர்.

பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அகமட் ஷாபிரின் ஆலோசனைக்கமைவாக பிரதேச செயலக முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.கைஸினால் ஏற்பாட்டு செய்யப்பட்ட இந்த கெளரவிப்பு நேற்று இடம்பெற்றது.

இதன் போது அட்டாளைச்சேனை 08 ஆம் பிரிவில் வசிக்கும் யூசுப் லெப்பை உதுமாலெப்பை (100வயது), அட்டாளைச்சேனை 01 ஆம் பிரிவில் வசிக்கும் ஏ.எல்.சுலைமாலெப்பை (104வயது), பாலமுனை 01 ஆம் பிரிவில் வசிக்கும் அவ்வா உம்மா (104வயது) உள்ளிட்ட பலரை அவர்களுடைய வீட்டிற்குச் சென்று பொன்னாடை போர்த்தி பரிசுப் பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அகமட் ஷாபிர், உதவிப் பிரதேச செயலாளர், கிராம உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முதியோர் தினத்தில் முதியோர்களை வீடு தேடிச் சென்று கெளரவிக்கும் நிகழ்வு அட்டாளைச்சேனை பிரதேச செயலக வரலாற்றில் இடம்பெற்றது இதுவே முதற்தடவையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :