சமுர்த்தி பயனாளிகளுக்கான சிறுகைத்தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு



நூருல் ஹுதா உமர்-
றக்காமம் பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினால் "சமுர்த்தி பயனாளிகளுக்கான சிறுகைத்தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு" இன்று (15) வெள்ளிக் கிழமை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஹஸ்பி மற்றும் எம்.எஸ். இஸ்ரத் ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. நஸீல் அஹமட் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் அதிதிகளாக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.ஏ. தஸ்லிம், சமுர்த்தி திட்ட முகாமையாளர் ஆகியோரும், பிரதேச செயலக மற்றும் சமுர்த்தி தலைமைப்பீட அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட தெரிவுசெய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கான சுயதொழில் வழிகாட்டல் செயலமர்வு இதன்போது இடம்பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :