சுலைமாலெவ்வை றஹீம் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்.



எம். என். எம். அப்ராஸ்-
ம்பாரை மாவட்டம் கல்முனை சாய்ந்தமருதை சேர்ந்த சுலைமாலெவ்வை றஹீம் அவர்கள் இன்று 2021.10.13 கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.எல்.எம் றியால் அவர்களின் முன்னிலையில் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இவர் கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயம்
மற்றும் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவரும் யாழ்பாணம் பல்கலைக்கழகத்தின் வணிக முகாமைத்துவ பட்டதாரியுமாவார்.
தேசிய தொழிற் பயிற்சி அதிகார சபையில் பரிசோதகராக கடமையாற்றி தற்போது சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் அபிருவிருத்தி உத்தியோகத்தராக சமூர்த்தி கணக்காய்வு பிரிவில் உள்ளக கணக்காய்வாளாராக கடமையாற்றுகின்றார். அத்துடன் யூத் அலீயன்ஸ் ஶ்ரீ-லங்கா இளைஞர் அமைப்பின் சிரேஷ்ட ஆலோசகருமாவார். இவர் யாசீன் வாவா சுலைமாலெவ்வை மற்றும் காலீது உதுமானாச்சி தம்பதியின் புதல்வருமாவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :