அம்பாரை மாவட்டம் கல்முனை சாய்ந்தமருதை சேர்ந்த சுலைமாலெவ்வை றஹீம் அவர்கள் இன்று 2021.10.13 கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.எல்.எம் றியால் அவர்களின் முன்னிலையில் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இவர் கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயம்
மற்றும் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவரும் யாழ்பாணம் பல்கலைக்கழகத்தின் வணிக முகாமைத்துவ பட்டதாரியுமாவார்.
தேசிய தொழிற் பயிற்சி அதிகார சபையில் பரிசோதகராக கடமையாற்றி தற்போது சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் அபிருவிருத்தி உத்தியோகத்தராக சமூர்த்தி கணக்காய்வு பிரிவில் உள்ளக கணக்காய்வாளாராக கடமையாற்றுகின்றார். அத்துடன் யூத் அலீயன்ஸ் ஶ்ரீ-லங்கா இளைஞர் அமைப்பின் சிரேஷ்ட ஆலோசகருமாவார். இவர் யாசீன் வாவா சுலைமாலெவ்வை மற்றும் காலீது உதுமானாச்சி தம்பதியின் புதல்வருமாவார்.
0 comments :
Post a Comment