அத்தியவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதை அடுத்து, வாழ்க்கைச் செலவும் அதிகரித்துள்ளது.
இதனைத் தாங்கிக் கொள்ளவதற்காக,சலூன்களில் முடி வெட்டுதல், முகச்சவரம் செய்தல் ஆகியவற்றுக்காக அறவிடப்படும் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கொழும்பு உள்ளிட்ட மினுவாங்கொடை பிரதேசத்திலுள்ள சலூன்களிலும் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
கம்பஹா மாவட்ட முடி திருத்துவோர் சங்கத்தில் எடுக்கப்பட்ட
தீர்மானத்தின் பிரகாரம், முடி வெட்டுவதற்கு 300 ரூபா, தாடி
வெட்டுவதற்கு 200 ரூபா, சிறுவர்களுக்கு முடி வெட்டுவதற்கு 200 ரூபா, மசாஜ் செய்வதற்கு 200 ரூபா,முடியை வெட்டி வர்ணம் பூசுவதற்கு 800 ரூபா என விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.இதேவேளை, இந்த விலை அதிகரிப்பு தொடர்பில், தற்போது சலூன்களில் விளம்பரங்கள்
ஒட்டப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
0 comments :
Post a Comment