திருகோணமலை மாவட்டம் கிண்ணியாவில் ஜனநாயக இடதுசாரி முண்னணியின் மகளிருக்கான கலந்துரையாடல் ஒன்று நேற்று (16)இடம் பெற்றது.
குறித்த கலந்துரையாடலானது ஜனநாயக இடது சாரி முண்ணனியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் ராசிக் றியாஸ்தீன் தலைமையில் இடம் பெற்றது. இதில் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள்,பெண்களுக்கான வாழ்வாதார உதவிகள் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இதன் போது உரையாற்றிய ஜனநாயக இடது சாரி முண்ணனியின் மாவட்ட அமைப்பாளர் ராசிக் றியாஸ்தீன் எதிர்வரும் மாகாண சபை தேர்தல் சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்க விகிதாசார முறையில் நடாத்தப்பட வேண்டும் என்றார்.
குறித்த கலந்துரையாடலில் கட்சியின் முக்காயஸ்தர்கள்,மகளிர் அணியினர் என பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment