காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு வைபவம் இன்று இடம்பெறாது!



சகாதேவராஜா-
காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு வைபவம் இன்று(15)வெள்ளிக்கிழமை நடைபெறாது என ஆலயபரிபாலனசபைத்தலைவர் கலாபூசணம் வித்தகர் சி.இராமநாதன் தெரிவித்தார்.
இவ்வாலய வருடாந்த தீமிதிப்பு மஹோற்சவம் கடந்த 5ஆம் திகதி சமுத்திரதீர்த்தம் கொண்டுவரப்பட்டு கதவுதிறத்தலுடன் ஆரம்பமானது.
கொரோனா காரணமாக ஆலய நிருவாகிகள் மற்றும் தின உபயகாரர்கள் மட்டும் கலந்துகொண்ட தினச்சடங்குகள் இடம்பெற்றுவந்தன.
பொதுவான பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இவ்வாலயத்தின் சிறப்புகளில் ஒன்றான தீமிதிப்பு இவ்வருடம் கொரோனா காரணமாக இடம்பெறாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :