வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த பயிலுனர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு



திமேதகு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்‌ஷ அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள " வறுமையற்ற இலங்கை " எனும் எண்ணக்கருவிற்கு அமைய சமூகத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த பயிலுனர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு வவுனியா நகர சபை மண்டபத்தில் இன்று (26.10.2021) சிறப்பாக இடம்பெற்றது.

இதன்போது வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த 54 பயிலுனர்களுக்கான நியமனக் கடிதத்தை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்கள் இன்று வழங்கி வைத்தார்.

குறித்த நிகழ்வில் வவுனியா நகரசபை பிரதித் தவிசாளர் திரு.குமாரசாமி மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள், பயிலுனர்கள் என பலரும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டமைக் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :