ஞாயிற்றுக்கிழமை (24) புத்தளம் நகர சபையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புத்தளம் நகர பிதா எம்.எஸ்.எம்.றபீக், புத்தளம் பிரதேச சபை தவிசாளர் அஞ்சன சந்தருவன், கற்பிட்டி நகர சபை தவிசாளர் முஹம்மத் இன்பாஸ் மற்றும் பிரஸ்தாப சபைகளின் உறுப்பினர்கள் பலரும், முஸ்லிம் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.தௌபீக் உட்பட ஏனைய முக்கியஸ்த்தர்கள் சிலரும் பங்குபற்றினர்.
கட்சியின் தீர்மானத்திற்கு அமைவாக , முன்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புத்தளம் அமைப்பாளராக இருந்த மறைந்த கே.ஏ.பாயிஸின் நெறிப்படுத்தலில் மேற்கொள்ளப்பட்டிருந்த உடன்படிக்கையொன்றின்படி , குறிப்பிட்ட தமது பதவிக் காலத்தை நிறைவு செய்துகொண்ட உறுப்பினர்களின் இடங்களுக்கு இந்த மூவரும் புதிதாக நியமிக்கப்பட்டனர்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமின் முன்னிலையில் புத்தளம் பிரதேச சபையின் புதிய உறுப்பினர்களாக முதியன்சலாகே அமிலா மற்றும் பாத்திமா நௌபியா ஆகியோரும், கற்பிட்டி பிரதேச சபையின் புதிய உறுப்பினராக சக்கீனாவும் சத்தியபிரமாணம் செய்துகொண்டனர்.
ஒப்பந்தத்தின் பிரகாரம் தமது பதவிக் காலம் முடிவடைந்ததையடுத்து, புத்தளம் பிரதேச சபை உறுப்பினர்களாக இருந்த ரிஸ்லியா பூட்டோ மற்றும் பாத்திமா இல்மா ஆகியோர் பதவி விலகியுள்ளனர். அவ்வாறே கற்பிட்டி பிரதேச சபையிலிருந்து பாத்திமா முஜீபா நீங்கியுள்ளார்.
இவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச்சின்னத்தில் கடந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர்களாவர்.
0 comments :
Post a Comment