மீராவோடை பிரதேசத்தில் முச்சக்கர வண்டி தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மீராவோடை பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்று இன்று (புதன்கிழமை) அதிகாலை இனந்தெரியாதோரால் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபள்யூ.எம்.சந்திரகுமார தெரிவித்தார்.

மீராவோடை எம்.பி.சி.எஸ். வீதியை சேர்ந்த முகம்மது லத்திப் முகம்மது நிப்ராஸ் (வயது – 28) என்பருக்கு சொந்தமானEP ABJ 4025 என்ற இலக்கமுடைய முச்சக்கர வண்டியே இவ்வாறு தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது.

குறித்த முச்சக்கர வண்டியின் உரிமையாளரான முகம்மது லத்திப் முகம்மது நிப்ராஸ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை ஏறாவூருக்கு சென்று மீண்டும் இரவு 01.45 மணியளவில் வீட்டுக்கு வந்து தூங்கும் போது அதிகாலை 03.15 மணியளவில் வெடிப்பு சத்தத்துடன் ஜன்னல் வழியாக வெளிச்சம் தெரிவதை அவதானித்து வெளியே வந்து பார்க்கும் போது முச்சக்கர வண்டி தீயினால் எரிந்து கொண்டு இருப்பதை அவதானித்து உறவினர்களின் உதவியுடன் தீயினை கட்டுபப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

தீயினால் முச்சக்கர வண்டி முற்றாக சேதமடந்துள்ளதுடன் வீட்டின் முன்பகுதியும் வீட்டிற்கான மின்சாரமும் தடைப்பட்டுள்ளதுடன் வீட்டில் சந்தேக நபர்கலாள் எச்சரிக்கை செய்து துண்டு பிரசுரம் ஒன்றும் வீட்டின் சுவரில் ஒட்டப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :