திருமலையில் இலவச குடிநீர் இணைப்புகள் வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
திருமலை மாவட்டத்தில் 300 இலவச குடிநீர் இணைப்புகள் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இலவச குநீர் இணைப்புகள் பெறுவதற்கான கட்டணங்கள் செலுத்திய பற்றுச்சீட்டுகளும் இணைப்பினைப் பெறுவதற்கான ஆவணங்களும் பயனாளிகளுக்குக் கையளிக்கும் நிகழ்வுகள் புல்மோட்டை, இறக்கக்கண்டி, மூதூர், தோப்பூர், ஈச்சலம்பற்று ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்றன.

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் இணைப்புச் செயலாளரும் கேகாலை மாவட்ட அமைப்பாளருமான எம்.எப்.ஏ. மரைக்காரின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில், ஜனநாயக இடதுசாரி முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் றாஸிக் ரியாஸ்தீன் மற்றும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் முக்கியஸ்தர்கள் உட்பட நிகழ்வுகள் நடைபெற்ற பிரதேசங்களின் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள், நீர் வழங்கல் காரியாலய பொறுப்பதிகாரிகள் என பலரும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :