கொழும்பு ஸாஹிராவில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வில் நூல் வெளியீடு! பிரதம அதிதி புரவலர் ஹாசிம் உமர்!!





ர்வதேச சிறுவர் தினமான அக்டோபர் முதலாம் ஆம் திகதி கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் ஆங்கிலம் மொழிமூலம் கல்விகற்கும் சிரேஸ்ட பிரிவின் 12 மாணவர்களது நூல் வெளியீட்டு வைபவம் கல்லூரியின் அதிபர் றிஸ்வி மரிக்கார் தலைமையில் அப்துல் கபூர் மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பாடசாலையில் மாணவர்களது ஆக்கத்திறனையும் இலக்கியத்தையும் வளர்க்கும் முகமாகவும் மாணவர்களை சுயமாக நூல்களை எழுத ஊக்குவிக்கும் முகமாகவும் அதனை பிரசுரிக்கவும் மாணவர்களுக்கு வழியமைத்துக் கொடுக்கப்படுகின்றது. இவ் வைபவத்தில் மாணவர்களது கலை, இலக்கியம் மற்றும் சிறுகதைகள் அடங்கிய 12 நூல்கள் வெளியீட்டு வைக்கப்பட்டது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக டவர்; ஹோல் நிதியத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் புரவலர் ஹாசிம் உமர் கலந்து கொண்டு மாணவர்களது 12 நூல்களின் முதற் பிரதிகளைப் பெற்றுக் கொண்டார்.

இவ் வைபவத்தில் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் பிரதி அதிபர் ரசீன் ஹசன், உப அதிபர் திருமதி ஹிஜாசி மொஹிதீன், பகுதித் தலைவி சீனாஸ் பதூர்டீன், உப அதிபர் ஏ.எம்.மிஹ்லார். ஆசிரிய ஆசிரியர்களும்; பெற்றோர்களும் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

ஏனைய நிகழ்வுகளின் படங்களையும் காணலாம். (இந் நிகழ்வு சுகாதார அமைச்சின் வழிகாட்டலின் கீழ் நடைபெற்றது)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :