காரைதீவு பிரதேசசபை உபதவிசாளரினால் வறிய குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கிவைப்பு..!



நூருல் ஹுதா உமர்-
காரைதீவு பிரதேச செயலகத்தின் கீழுள்ள மாளிகைக்காடு பிரதேசத்தில் வசிக்கும் வரிய குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு வழங்கும் நிகழ்வு காரைதீவு பிரதேச சபையின் உப தவிசாளரும், காரைதீவு பிரதேச முஸ்லிம் பிரதேசங்களுக்கான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளருமான ஏ.எம். ஜாஹீரின் ஏற்பாட்டில் அவரது காரியாலயத்தில் இடம்பெற்றது.

குறித்த இலவச குடிநீர் இணைப்பிற்காக தனது ஜாஹிர் பவுன்டேஷன் நிதியத்தினூடாக பணம் செலுத்திய பற்றுச்சீட்டினை காரைதீவு பிரதேச சபையின் உபதவிசாளர் ஏ.எம்.ஜாஹீர் இன்று பயனாளிகளுக்கு வழங்கிவைத்தார். மேற்படி நிகழ்வில் ஜாஹீர் பவுன்டேஷன் அமைபின் செயலாளர் எஸ்.பஸ்லூனும் கலந்துகொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :