பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு



மினுவாங்கொடை நிருபர்-
மார்பகப் புற்றுநோய் தொடர்பில் பெண்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என, தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
தற்போது மார்பகப் புற்றுநோயால் அதிகளவிலான பெண்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் வருடத்திற்கு 4,500 க்கும் அதிகமான மார்பகப் புற்றுநோய் நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாக, உலக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ரஞ்சித் படுவன்துடாவ தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில் இந்நிலைமை படிப்படியாக அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :