அவர் மேலும் தெரிவித்ததாவது, ரிசாத் ஷரீப் என்பவர் முன்னாள் அமைச்சரும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினரான அதாவுள்ளாவின் கட்சியை சேர்ந்தவர். மட்டுமலாது கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதாவுள்ளாவுடன் இணைந்து போட்டியிட்டவர்.
இந்த நிலையில் கல்முனை உப செயலக பிரச்சினை, சாய்ந்தமருது சபை பிரச்சினையை அதாவுள்ளா மூலம் இவர் தலையிட்டு தீர்த்திருக்க முடியும். அவ்வாறு செய்ய வக்கில்லாமல் ஹரீஸ் ராஜினாமா செய்து, அரசியல் அமைப்பையும் மாற்றித்தந்தால் 6 மாதத்தில் 33 வருட பிரச்சினைகளை தீர்ப்பேன் என்பது உலக மகா கோமாளித்தனமான கருத்து மட்டுமல்ல, முஸ்லிம் காங்கிரசை போன்று தேசிய காங்கிரசும் இப்பிரச்சினைகளை பிச்சைக்காரன் புண்ணாக வைத்து அம்பாரை மாவட்ட முஸ்லிம்களின் வாக்குகளை ஏமாற்றி களவெடுக்க முனைகின்றது.
உண்மையில் அரசியல் யாப்பை இதற்காக மாற்றுவது என்பதை விட அதாவுள்ளாவிடம் இதை எடுத்துக்கூறி அவரின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து அதை அதாவுள்ளா கட்சியின் வேட்பாளர் ரிசாத் ஷரீபுக்கு 6 மாதத்துக்கு மட்டும் வழங்கி இப்பிரச்சினையை தீர்க்க தேசிய காங்கிரசால் முடியுமா என நாம் சவால் விடுகிறோம்.
0 comments :
Post a Comment