மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் காசோலைகள் வழங்கும் நிகழ்வு



நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக சொத்திழப்பு, கடும் பாதிப்புற்றோர்க்கான கொடுப்பணவு , வணக்கஸ்தல அழிவுகளுக்கான கொடுப்பணவு ஆகியவற்றுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று (25) மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

நீதி அமைச்சின் இழப்பீட்டு அலுவலகத்தினால் நெறிப்படுத்தப்படும் குறித்த இழப்பீடு வழங்கும் நிகழ்வில் மன்னார் மாவட்டத்தில் 80 பயனாளிகளுக்கு குறித்த இழப்பீட்டு காசோலை இன்று வழங்கி வைக்கப்பட்டது.
மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஸ்ரென்லி டீமெல் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ. காதர் மஸ்தான் அவர்கள் பயனாளிகளுக்கான காசோலைகளை இன்று வழங்கி வைத்தார்.

குறித்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதேசச் செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மற்றும் உதவித் திட்டமிடல் பணிப்பாளர், திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் எனப் பலரும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :