திருகோணமலை மாவட்ட வெளிநாட்டுப் பட்டதாரிகள் அமைப்பின் கலந்துரையாடல் கூட்டம் (10) கிண்ணியா குட்டிக் கராச் சவாஹிர் இல்லத்தில் இடம் பெற்றது.
வேலைவாய்ப்பற்ற வெளிநாட்டு பட்டதாரிகளின் நியமனங்கள் தொடர்பாக இங்கு கலந்துரையாடப் பட்டன.
இக் கலந்துரையாடலில் பட்டதாரி ஒருவர் கருத்துரைக்கையில் 60 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அரசாங்கத்தினால் நியமனங்கள் வழங்கப் பட்டுள்ளன. இதில் 7ஆயிரம் பேர் எஞ்சியுள்ளனர்.இவர்களுக்கான நியமனத்தை பெற்றுக் தருமாறு இக்கலந்துரையாடலில் அவர் முன் வைத்தார்.
ஜனாதிபதியினால் நியமிக்கப் பட்ட அமைச்சர் வாசுதேவநாணயக்கார பட்டதாரி நியமனக் குழுவில் இருப்பதால் வெளிநாட்டு பட்டதாரிகளின் பிரச்சினைகளை அவரிடம் முன்வைத்து இதற்கான தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும்.உங்களது நியமனங்களை அமைச்சர் பெற்றுத் தருவார்.என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் கிழக்கு மாகாண அமைப்பாளர் எம்.எப்.ஏ.மரைக்கார்
மற்றும் ஜனநாயக இடது சாரி முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் ராசிக் றியாஸ்தீன் ஆகியோர் இக் கலந்துயாடலில் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இதனையடுத்து மகஜர் ஒன்றினை இவர்களிடம் திருகோணமலை மாவட்ட வேலைவாய்ப்பற்ற வெளிநாட்டு பட்டதாரிகள் அமைப்பினால் கையளிக்கப் பட்டமை குறிப்பிடத் தக்கது.
இக்கூட்டத்தில் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் கிழக்கு மாகாண அமைப்பாளர் எம்.எப்..ஏ.மரைக்கார்.ஜனநாயக இடது சாரி முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் ராசிக் றியாஸ்தீன்,ஒய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்,ஊடகவியலாளர் இர்ஷாத் மற்றும் வெளிநாட்டுப் பட்டதாரிகள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment