அட்டாளைச்சேனை அல்-ஆர்யன் விளையாட்டுக் கழகத்தினால் கடற்கரை பிரதேசத்தில் சிரமதான நிகழ்வு!



ட்டாளைச்சேனை கடற்கரையின் இயற்கையை பாதுகாக்கும் முகமாக கடற்கரை சூழலில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்திருந்த சில பகுதிகளை சுத்தமாக்கும் பணி இன்று 2021.10.03 (ஞாயிறு) காலை அட்டாளைச்சேனை கடற்கரையில் சிரமதானப்பணி இடம்பெற்றது.
இச் சிரமதானப்பணி அல்-ஆர்யன் விளையாட்டுக் கழகத்தின் தலைவர், செயலாளர், உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
சிரமதானப் பணி முடிவடைந்த பின்னர், கழகத்தின் தலைவர் உரையாற்றுகையில் , இவ் சிரமதான பணியின் முயற்சியில் பங்கெடுத்த கழகத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து இது போன்று பல பணிகளை சமூகத்திற்காக பல திட்டங்களை முன்னெடுக்க இருப்பதாகவும் அதற்கு கழக உறுப்பினர்களின் பூரண ஒத்துழைப்பையும் வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :