கொரோனாவினால் உயிரிழந்தவர்களுக்கு விசேட துவா பிரார்த்தனை



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
கொரோனாவினால் உயிரிழந்தவர்களுக்காகவும், கொரோனா நோயில் இருந்து உலக மக்களை பாதுகாக்கும் நோக்கிலும் இமாம் ஜஃபர் ஸாதிக் பணிமனையின் ஏற்பாட்டில் கத்தமுல் குர்ஆன் நிகழ்வும், விஷேட பிரார்த்தனையும் மற்றும் சமைத்த உணவு வழங்கும் நிகழ்வு ஓட்டமாவடி நாவலடியில் இடம்பெற்றது.

கல்குடா இமாம் ஜஃபர் ஸாதிக் பணிமனையின் ஏற்பாட்டில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களுக்கான ஆத்மா சாந்தி வேண்டியும், கொரோனா நோயில் இருந்து உலக மக்களை பாதுகாக்கும் நோக்கிலும், ஜனாதிபதி, பிரதமர், முப்படையினர், சுகாதார துறையினரின் ஆசி வேண்டியும் விஷேட பிரார்த்தனைகளை இமாம் ஜஃபர் ஸாதிக் பணிமனையின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எல்.ரி.ஏ.ஹலீம் நிகழ்த்தினார்.

இதன்போது கத்தமுல் குர்ஆன் நிகழ்வும், விஷேட பிரார்த்தனை நிகழ்வில் சுகாதார விதிமுறைகளை பேணி மக்கள் கலந்து கொண்டதுடன், கலந்து கொண்டவர்களுக்கு சமைத்த உணவு வழங்கி வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :