அத்தனகல்ல தொழிற்சாலை களஞ்சியசாலையில் பாரிய தீ விபத்து, ஏராளமான பொருட்கள் சேதம்



மினுவாங்கொடை நிருபர்-
த்தனகல்ல - ஊராபொல பகுதியில் உள்ள தளபாட உற்பத்தி தொழிற்சாலை ஒன்றின் களஞ்சிய சாலையொன்றில் பாரிய தீ ஏற்பட்டுள்ளது.
தீப்பரவலுக்கான காரணம் கண்டறியப்படவில்லையென, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுமார் 2 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட குறித்த களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீயினால், அங்கு களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கதிரைகள் (சோஃபா) உள்ளிட்ட மேலும் பல பொருட்கள் தீக்கிரையாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தீப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு, சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டதாகவும், தீயணைப்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :